கோவாவில் கடந்த 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல் திரை பிரபலங்கள் ரஜினி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Advertisment

இந்நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், அரங்கில் அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தில் வரும் காட்சியை ஜாலியாக நடித்துக் காண்பித்தார். பின்பு மேடையில் பேசிய அவர், “காந்தாரப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷெப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தார். இது சர்ச்சையை உருவாக்கியது. 

Advertisment

 சர்ச்சையை உருவாக்கிய  ரன்வீர் சிங் பேச்சும் நடிப்பும்அவர் பெண் ஆவி என்று பேசியதும் அக்கதாப்பாத்திரம் போல் நடித்ததும் துளு நாடு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. அது பெண் ஆவி இல்லை பெண் கடவும் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் கூறி வந்தனர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேட்டு வந்தனர். 

இந்த நிலையில் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “படத்தில் ரிஷப் ஷெட்டியின் அற்புதமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. ஒரு நடிகராக அந்த குறிப்பிட்ட காட்சியை அவர் செய்வதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படும் என்பதை நான் அறிவேன். அதற்காக அவர் என்னுடைய போற்றுதலுக்குறியவர். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையையும் நான் எப்போதும் ஆழமாக மதிக்கிறேன். யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தியிருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment