பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் தீபவளியை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற பாடல்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. 

Advertisment

இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இதுவரை ரூ.95 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுனர். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், “இந்தப் படம் நிறைய விவாதங்களை உருவாக்கியிருக்கு. ஆனாலும் இயக்குநர் சொன்ன விஷயம் எல்லாத்துக்கு போய் சேர்ந்திருக்கு. எனக்கு இந்த கதை கேட்டப்போ, ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு பிடிச்சிருந்துச்சு. 

Advertisment

இந்த படத்துல ஒரு சில பேருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் படம் பார்க்க பார்க்க படம் பிடிக்கும். ஒரு திரும்ப திரும்ப பார்க்கும் படமா இது இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா என்ஜாய் பண்ணி பார்க்க நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு” என்றார்.