Advertisment

பெரும் போராட்டத்திற்கு பிறகு உருவாகியது ‘ஓ பட்டர்பிளை’ - இயக்குநர் விஜய் ரங்கநாதன் பேச்சு

A34

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Advertisment

கணவன், மனைவிக்குள்ளான காதல், மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது. பிறகு இப்படத்தின் டீசர் வெளியாகியது. டீசரில், திரில்லர் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தை கொண்டுள்ள இப்படத்தின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. டீசர் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர் விஜய் ரங்கராதன் கூறியிருப்பதாவது... பல வருடங்களாக ஸ்கிரிப்ட் குறித்து வேதனைப்பட்டு, நடிகர்களை கண்டுபிடிக்க போராடி, இறுதியாக அவர்களைக் கண்டுபிடித்து, அதை உருவாக்க அனைத்து அளவிலான போராட்டங்களையும் நடத்தி, எனக்கும் எனது குழுவிற்கும் உத்வேகம் அளித்து வரும் பெரிய யோசனையின் கீழ் டீசரை வெளியிட்டுள்ளோம். இப்படத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
  

PRESS MEET tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe