Advertisment

‘கெளம்பி வாரான் காளமாடன்...’ - ஆக்ரோஷமாக ‘பைசன்’ துருவ் விக்ரம்

24

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடந்து கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் வெளியானது. படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் படம் நன்றாக இருப்பதாக முழுப்படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் படக்குழுவை பாராட்டியிருந்தார். இதுவரையில் படத்தில் இருந்து ‘தீக்கொளுத்தி’, ‘றெக்க றெக்க’, ‘சீனிக்கல்லு’ மற்றும் ‘தென்நாடு’ என நான்கு பாடல்கள் வெளியாகியுள்ளது.  

Advertisment

இந்த நிலையில் படத்தின் ஐந்தாவது பாடலாக ‘காளமாடன் கானம்’ பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இப்பாடல் போட்டிக்கு தயாராவதற்கு முன்பு கடவுளுக்கு படையல் போட்டு சாமி கும்பிடும் போது வரும் பாடலாக தெரிகிறது. பாடலில் துருவ் விக்ரம் சாமி கெட்டப்பில் ஆக்ரோஷமாக நடனமாடும் காட்சிகளும் கபடி போட்டியில் கலந்து கொள்ள களத்திற்கு செல்லும் போது அவரை பலரும் சந்தித்து வாழ்த்தும் காட்சிகளும் இடம் பெறுகிறது. இப்பாடலை வி.எம்.மஹாலிங்கம் பாடியுள்ளார். மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். 

Bison dhruv vikram mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe