Advertisment

ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு; ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

19 (10)

பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். 

Advertisment

இதனிடையே ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். மேலும் இது குறித்து யூட்யூப் சேனல்களில் பேட்டியும் கொடுத்து வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல் ஜாய் கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. இது ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்துகையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததால், அது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

Advertisment

இந்த வழக்கு குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ், சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்வேன் என விளக்கமளித்திருந்தார். பின்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகியிருந்தார். ஆனால் ஜாய் கிரிசில்டா கர்ப்பமான நிலையில் ஆஜராகியிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் ஆஜாகுவதற்கு நீதிமன்றம் படியேறும் காட்சிகள் பார்ப்பவர்களை கலங்கடித்தது. இதையடுத்து  ஜாய் கிரிசில்டா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பின்பு அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், மகளிர் ஆணையம் முன்பு ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த குழந்தைக்கு நான்தான் தந்தை என ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆணையத்திற்கும் மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

Women Madhampatty Rangaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe