திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 98வது ஆண்டு ஆஸ்கர் விழா 2026 மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது. 

Advertisment

ஆஸ்கர் விழாவில் ஆங்கில மொழி திரைப்படங்களை தவிர்த்து சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் மற்ற நாட்டு மொழி படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தங்களது நாட்டின் அதிகாரப்பூர்வ படம் என ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து இந்தி படமான ‘ஹோம்பவுண்ட்’(Homebound) படம் அனுப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் விருதுகளுக்கான தகுதி பட்டியல் 12 பிரிவுகளுக்கு மட்டும் ஆஸ்கர் குழு அறிவித்துள்ளது. இதில் சிறந்த சர்வதேச படப் பிரிவில் மொத்தம் 15 படங்கள் தேர்வாகியுள்ளன. இப்பிரிவில் மொத்தம் 108 படங்கள் அனுப்பப்பட்ட நிலையில் அதிலிருந்து 15 படங்கள் அடுத்த சுற்றுக்கு தகுதியாகியுள்ளது. இதில் இந்திய சார்பில் அனுப்பப்பட்ட ஹோம்பவுண்ட் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த 15 படங்களில் 5 படங்கள் இறுதி செய்யப்பட்ட நாமினேஷனில் இடம்பெறும். அதிலிருந்து ஒரு படம் வெற்றி பெரும் இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகிறது.

19 (43)

இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரீமியர் செய்யப்பட்டது. பின்பு டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்தை தர்மா புரொடக்‌ஷன் தயாரித்திருந்தது. இதில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நீரஜ் கய்வான் இயக்கியிருந்த இப்படத்திற்கு அமித் த்ரிவேதி பாடல்களுக்கும் நரேன் சந்திரவர்கர் மற்றும் பெனடிக்ட் டெய்லர் ஆகியோர் பின்னணி இசைக்கும் இசையமைத்திருந்தனர். 

Advertisment

இப்படம் 2020ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. அந்த கட்டுரை தேசிய காவலர்கள் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிக்கும் இரண்டு பால்ய நண்பர்களைப் பற்றி விவரிக்கிறது.