பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தர்மேந்திரா(89). 1960 ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நாயகனாக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தியைத் தாண்டி பஞ்சாபி மொழி உட்பட கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பத்மபூஷன் விருதும் இந்திய அரசு வழங்கி கௌரவித்தது. சினிமாவை தாண்டி அரசியலிலும் இருந்துள்ளார். பிஜேபி சார்பில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 

Advertisment

இவர் சமீபகாலமாக உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அண்மையில் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, இவர் மறைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை அவரது மனைவியான நடிகை ஹேமா மாலினி தெரிவித்தார். மேலும் செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக சாடினார். பின்பு தர்மேந்தியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்த நிலையில் தர்மேந்திரா உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வீட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் ஒன்று வெளியேறியுள்ளது. மேலும் அவரது வீட்டிற்கு பிரபலங்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதோடு இயக்குநர் கரண் ஜோஹர் இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், “ஒரு பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்தது” என தர்மேந்திரா குறித்து எமோஷ்னலாக தனது வலைதலப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் தர்மேந்திரா குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.