Skip to main content

இன்டர்நெட் பிரபலங்களுடன் ஹீலியம் லைட்டில் யோகிபாபு, பிக்பாஸ் யாஷிகாவின் 'ஜாம்பி'  

Published on 11/03/2019 | Edited on 11/03/2019
Zombie

 

எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் 'ஜாம்பி'. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் இணைந்து நடிக்கும்  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் நிறைவு பெறுகிறது. இதில் படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. 

 

 

சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்களுடன் முக்கிய நட்சத்திரங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது. ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் காட்சிப்படுத்தியுள்ளார். சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈ.சி.ஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது. வேகமாக உருவாகிவரும் 'ஜாம்பி' படத்தை படக்குழுவினர் கோடையில் வெளியிடவுள்ளனர். புவன் நல்லன் இயக்கும்  இப்படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்து வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முரட்டு சிங்கிள் பக்கத்தில் அமர்ந்த யாஷிகா ஆனந்த்... கோதாவில் குதித்த ரசிகர்கள்!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதையும் தாண்டி தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.இந்நிலையில் தற்போது ஜாம்பி படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடித்துள்ள படம் என்பதால் ஜாம்பி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும் கூறியுள்ள யாஷிகா, இந்த படத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருப்பதோடு சண்டைக் காட்சியிலும் நடித்திருப்பதாக கூறினார். ரசிகர்களுடன் மக்களுக்கு உதவி செய்ததாக கூறிய அவர், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் அதன் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும் கூறினார்.
 

cb



இந்த விழாவில் நடிகர் பிரேம்ஜியும் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த டீஷர்ட் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதாவது அந்த டீ ஷர்ட்டில் முரட்டு சிங்கிள் என அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரேம்ஜி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த படத்தின் நாயகி யாஷிகா அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தார். அதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக இணையத்தில் பேசப்படுகிறது. மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்துள்ள நீங்கள் எப்படி எங்கள் தலைவர் (பிரேம்ஜி) அருகில் அமரலாம் என்று அவரிடம் டுவிட்டரில் செல்ல சண்டை போடுகிறார்களாம் பிரேம்ஜி ரசிகர்கள். இருவருமே தங்களின் டுவிட்டர் பக்கங்களில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

இந்த படத்திற்காக மேக்கப் போட எவ்வளவு நேரம் ஆச்சி தெரியுமா...? - பிக்பாஸ் யாஷிகா 

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது இப்படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த் இப்படம் குறித்து பேசும்போது...

 

yashika

 

 

''நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி தான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு கே.எஸ். அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கும். இருப்பினும் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம். மேக்கப் போடுவதற்கு மட்டும் 3 மணி நேரம் ஆகும். எனக்காக பொறுமை காத்து மேக்கப் போட்டதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி'' என்றார்.