Skip to main content

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய நடிகை ஸாய்ரா!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

zaira wasim


கரோனா பாதிப்பு இன்னும் முடிவு பெறாத நிலையில் பாலைவன வெட்டுக்கிளி படை வட இந்தியாவில் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கிவிட்டன. இதனால் இந்திய விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.
 


இந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து நடிகை ஸாய்ரா வாசிம் குரானை மேற்கோள் காட்டி பகிர்ந்த கருத்து கடும் விமர்சனத்தைச் சந்தித்ததால் அவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளார். அதில்,

"ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், ரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்" என்று ஸாய்ரா வாசிம் ட்வீட் செய்திருந்தார்.
 

 


இந்தப் பதிவு பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. ஒருசிலர் ஸாய்ரா வாசிமின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், ஒருசிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘என் மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிராக இருப்பதால் இந்த முடிவை எடுக்கிறேன்’ -  ‘டங்கல்’ புகழ் சைரா வாசிம்

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நடிகை சைரா வாசிம், தன்னுடைய சினிமா பயணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக கூறி பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். டங்கல் திரைப்படத்தில் அமீர் கானின் மகளாக திரம்பட நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தவர் இவர்.
 

amir khan

 

 

காஷ்மீர் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இந்த படத்தை தொடர்ந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்னும் படத்திலும் நடித்தார். அமீர் கானின் தயாரிப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. குறிப்பாக சீனாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. தற்போது ஸ்கை ஸ் பிங்க் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சினிமா பயணத்தை நிறுத்திக்கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

 


சினிமாவில் இனிமேல் நடிக்காமல் இருக்க காரணமாக அவர் கூறுவது. சினிமா தன்னுடைய மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானதாக இருப்பதால் இந்த முடிவை நான் எடுக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். இதை ஒரு நீண்ட அறிக்கையாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.