Skip to main content

‘நேர்கொண்ட பார்வை’ குறித்து புதிய அப்டேட் கொடுத்த யுவன்... 

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

அஜித் நடித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக சொல்லப்படும் நேர்கொண்ட பார்வை படம் ஜூலை மாத இறுதியிலேயே வெளியாக இருப்பதாக புது தகவல் வெளியாகி வருகிறது.
 

yuvanshankar raja

 

 

இப்படத்தின் ட்ரைலர் ஜூன் 12ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகி  யூ-ட்யூப், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டானது. 
 

பாலிவுட்டில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியான படம்  ‘பிங்க்’. மூன்று பெண்களுக்கு நடந்த அநீதியை பற்றி பேசும் இப்படம், ஹிந்தி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ரீமேக் உரிமையை வாங்கினார் போனி கபூர். ஸ்ரீதேவி முன்பு ஒருமுறை அஜித்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க ஆர்வம் காட்டினாராம். பிங்க் படம் பார்த்த பின்பு அஜித்தை வைத்து தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என தன்னுடைய விருப்பத்தை போனிகபூரிடம் தெரிவிக்க தற்போது அதை நிறைவேற்றியுள்ளார் போனி கபூர். தமிழில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க, டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்.

 
இந்நிலையில் படத்திற்கான முழு புரோமோஷனில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் இறங்கியுள்ளனர். இதனால் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகுவதற்கு முன்பே வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 

இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நேற்று இரவு நேர்கொண்ட பார்வை படத்திற்கான பின்னணி இசையை தொடங்கியிருப்பதாக ட்வீட் செய்துள்ளார். யுவன் பின்னணி இசை என்றாலே அதில் ஒரு தனித்துவம் இருக்கும். பிஜிஎம் கிங் என்று கூட சமூக வலைதளத்தில் சொல்வது உண்டு. அஜித்துடன் அவர் பணிபுரிந்த அனைத்து படங்களிலும் பின்னணி இசை பேசப்பட்டிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த U1!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

பரக

 

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். அதில், "  மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும்,  இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று , "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் யுவனின் பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது யுவன் ஆக்கரமித்துள்ளதாக அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். 

 

 

Next Story

"யுவன் சங்கர் ராஜா கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு.." - அண்ணாமலை தடாலடி

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

jk


'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் கருத்துக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று காலை, "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை , " யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடன் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன் யாருமில்லை. அவரை விட நான் கருப்பு. அவர் சாதாக் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இது தொடர்பான கேள்விக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்" என்றார்.