’காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. அதன்பிறகு அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.
செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'என்.ஜி.கே.' இப்படம், விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் கடும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பின் நடந்த ஒரு விழா மேடையில், 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் தெரிவித்தனர். இதனையடுத்து உற்சாகமான ரசிகர்கள், இது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செல்வராகவன், 8-ஆவது முறையாக யுவன்சங்கர் ராஜாவுடன் இணைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பதிவில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் தாணுவையும் டேக் செய்துள்ளதால், இது 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Extremely happy to join hands for 8th time with @thisisysr !! @dhanushkraja
— selvaraghavan (@selvaraghavan) December 23, 2020
Kalaippuli S Thanu @theVcreations pic.twitter.com/AKWbirnFGF