Skip to main content

அப்ப தங்கர்பச்சான்... இப்ப வெற்றிமாறன் - யூகி சேதுவின் ஒப்பீடு

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

yugi sethu talk about vetrimaran and thangar bachan

 

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம் டக்கு முக்கு டிக்கு தாளம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க, முனீஸ்காந்த், மன்சூர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தங்கர்பச்சான், விஜித் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், கஸ்தூரி ராஜா, பேரரசு, நடிகர்கள் நாசர், யோகி சேது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய யூகி சேது வெற்றிமாறனையும், தங்கர்பச்சானையும் ஒப்பீட்டு கூறியுள்ளார்.

 

அவர் கூறுகையில், "கரிசல் காட்டு இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது தங்கர்தான். கி.ராவின் வளர்ப்பு மகன் தங்கர் என்று சொல்வதைவிட, தங்கருடைய வளர்ப்பு தந்தை கி.ரா என்று சொல்லலாம் அந்தளவுக்கு கி.ராஜநாரயணனை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கர் பார்த்துக்கொண்டார். கரிசல் காட்டு இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்களை சினிமாவில் கதையாக எடுத்ததில் தங்கருக்கு பெரிய பங்களிப்பு உள்ளது. உமா சந்திரனுடைய 'முள்ளும் மலரும்', 'சிறுவன் எப்போதும் புதுமை தந்து' என ஒன்றிரண்டு தமிழ் இலக்கியங்களை வைத்து படம் பண்ணியிருந்தாலும், தமிழ் இலக்கியங்களை தூசி தட்டி அதில் நிறைய சொத்துகள் இருக்கிறது எனக் கூறி, அதைத் திரைப்பட காவியமாக்கியது முதலில் தங்கர். இந்தத் தலைமுறையில வெற்றிமாறன். இந்தப் படத்தினுடைய தலைப்பு 'டக்கு முக்கு டிக்கு தாளம்',  'கண்ணன் என் காதலன்' படத்தின் பாடலில் வரும்.

 

தஞ்சை ராமதாஸ் உடைய கவிதைகள் சில கெட்ட வார்த்தைகள் சொல்ற மாதிரி இருக்கும். "காலும் முக்காலும் ஒன்னு உங்க அக்காளும் நானும் ஒன்னு" என்று சொல்லிருப்பார். அந்த மாதிரி வார்த்தை செறிவை எப்படி வேண்டுமானாலும் போட்டு மாத்தலாம் என்ற பெருமை தமிழுக்கு உண்டு. அதே போல் தமிழை பற்றி எல்லாம் தெரிந்து தங்கர் இந்தப் படத்திற்கு 'டக்கு மூக்கு' ன்னு தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப் படத்துல தங்கர்பச்சானா... இல்ல அமிதாப்பச்சனான்னு சந்தேகமா இருக்கு. ஏன்னா அந்தளவுக்கு படத்தில் ஆக்சன் நல்லா இருக்கு. விஜித் நல்ல நடிச்சிருக்காரு. தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வரவேண்டியவர்களை எல்லாம் அவர்கள் அப்பாவே படம் எடுத்த கெடுத்துவிட்ட கதையெல்லாம் நமக்கு தெரியும். ஆனால், தங்கர் அப்படி இல்லை. கஸ்தூரி ராஜாவை போல நல்ல படம் பண்ணுவார். தங்கர் நடிப்பைத் தாண்டி பன்முகத் திறமை கொண்டவர். நான் நாசரை வைத்து படம் பண்ணேன். அதுக்கு டிஸ்டிப்யூட்டர் தங்கர்தான். ரூமை திறந்து பார்த்தால் அம்மா வயிற்றில் படுத்திருக்கிற மாதிரி ஒரு ஓரமாதான் படுத்திருப்பார். அவருக்கு ஓரம்தான் பிடிக்கும். எங்க யாருக்குமே மது அருந்துவது, புகைபிடிப்பது என எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இப்படி நிறைய பேசணும்னு ஆசையாக இருக்கு, ஆனால் டைமில்லை. டைமுன்னு சொல்லும் போதுதான் நியாபகம் வருது. எங்க வீட்டுலயெல்லாம் சாமிபடம்தான் இருக்கும். ஆனால், கே.எஸ் ரவிக்குமார் வீட்ல மட்டும் பெரிய கடிகாரம் இருக்கும். அவர்கிட்ட டைட்டானிக் படத்த கொடுத்து 55 நாட்கள்ல படமாக்க சொன்னால்கூட அதை முடித்து வெற்றிப்படமாக்கக்கூடிய தகுதி அவருக்கு இருக்குது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சானை அறிவித்தது பாமக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Film director Thangar Bachan announced as CM candidate for Cuddalore Parliamentary Constituency

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக வேட்பாளராக கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு முகங்களைப் பெற்றுள்ள தங்கர் பச்சான் போட்டியிடுகிறார் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் கிராமத்தில் பச்சான்-லட்சுமி தம்பதியினருக்கு 1961 ஆம் ஆண்டு 9வது பிள்ளையாகப் பிறந்துள்ளார். இவரது தந்தை மரபு வழி தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் தங்கராசு பின்னர் இவரது பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்துக்கொண்டு தங்கர் பச்சான் என மாற்றிக்கொண்டார். இவர்  திரைப்படக் கல்லூரியில் ஒளி ஓவியம் கற்று, ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று திரைப்பட கலையை அறிந்தவர். இவர் நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவரது நூல்களை ஆராய்ச்சி செய்து 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூலாக உள்ளது. இவர் தமிழ்த் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.

இவர் இயக்கி நடித்துள்ள பள்ளிக்கூடம் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கர் பச்சானுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விஜித் பச்சான், அரவிந்த் பச்சான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாமக தங்கர் பச்சானை வேட்பாளராக அறிவித்துள்ளது.