Skip to main content

யோகிபாபு படத்தால் ஏற்பட்ட தகராறு - ஊழியர்களைக் கடத்தி மிரட்டிய கும்பல்

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Yogibabu film distributor and producer had a money problem with each other

 

கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு, பிரியா கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வெளியான படம் 'ரிப்பீட் ஷூ'. இப்படத்தின் விநியோகம் மற்றும் சேட்டிலைட்ஸ் உரிமத்திற்காக தயாரிப்பாளர் கார்த்தியிடம் ரூ.1.10 கோடி ஒப்பந்தம் செய்து அதில் முதல் தவணையாக ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மதுராஜ் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

ad

 

இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக கடந்த 30ஆம் தேதி சொந்த ஊரான மதுரைக்குச் சென்றுவிட்டதாகவும் இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

 

இந்த சூழலில் கடந்த 1ஆம் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த தயாரிப்பாளர் கார்த்தி 13 பேர் கொண்ட கும்பலுடன் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சர் ஆகிய இருவரையும் அடித்து கத்தியைக் காட்டி மிரட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரையும் அடைத்து வைத்துப் பணம் கேட்டு மிரட்டி அவர்கள் செல்போன்களை பறித்து ஏ.டி.எம் கார்டின் மூலம் ரூ.70 ஆயிரம் தொகையை எடுத்துக்கொண்டுள்ளார்களாம். பின்னர் இருவரையும் தாம்பரம் இரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு போலீசில் சொன்னால் கொன்றுவிடுவோம் எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களாம். 

 

இதனைத் தொடர்ந்து மதுரைக்குச் சென்ற மதுராஜ் சென்னைக்குத் திரும்பியதும் இந்த சம்பவம் தெரிய வந்து கோபி, பென்சர் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அதில் பென்சர் மட்டும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மதுராஜ். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸ், தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் நாகராஜ் மற்றும் வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போன பென்சரை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மஞ்சும்மெல் பாய்ஸ் போல அல்ல... சல்யூட் சார்” - யோகி பாபு புகழாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
yogi babu appreciate prithviraj aadujeevitham

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, யோகி பாபு இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

yogi babu appreciate prithviraj aadujeevitham

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “இன்னும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. அந்த வலி நிறைந்த பயணம். இப்படம் சினிமா பிரியர்களுக்கு விருந்து. இது மஞ்சும்மெல் பாய்ஸ் போல சீட் நுணியில் பார்க்கும் சர்வைவல் த்ரில்லர் அல்ல. இது ஒரு எமோஷனல் சர்வைவல் டிராமா. அதனால் அதற்கு தகுந்த வேகத்தில் நகரும். பிரித்விராஜ் சார் இந்த படத்தின் உயிர். மம்மூட்டி, மோகன்லால் நடிகர்களுக்கு பிறகு பிரித்விராஜுடைய நடிப்பு இன்னும் பல வருடங்கள் மறக்க முடியாததாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் சல்யூட் சார்” என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே மாதவன், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அவர்களுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
yogi babu new movie update

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகிபாபு நடிப்பில் ஒரு படம் உருவாகும் வருகிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்க லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஆர் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. 

இப்படம் குறித்து யோகி பாபு கூறுகையில், “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்றார்.