Advertisment

"என்கிட்ட முழுக்கதை சொல்லல" - 'கர்ணன்' பட மேடையில் யோகி பாபு பேச்சு!

yogi babu

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ‘கர்ணன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (31.03.2021) நடைபெற்றது. இயக்குநர் மாரி செல்வராஜ், யோகி பாபு, சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="92c84d28-e5dd-42de-b48c-cde0be9a07c0" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad.png" />

நிகழ்வில் பேசிய நடிகர் யோகி பாபு, "இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய மாரி செல்வராஜ் சார், தனுஷ் சார், தாணு சார் என அனைவருக்கும் நன்றி. படம் தொடங்கும்போதே என்னுடைய கேரக்டர் குறித்து மாரியிடம் கேட்டேன். இதுவரைக்கும் காமெடிதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அதனால் இந்தப் படத்தில் அந்த ட்ராக்கை மாத்தி உங்களுக்குப் பெரிய கேரக்டர் கொடுக்கிறேன் என்றார். என்கிட்ட முழுக்கதை சொல்லல. ‘பரியேறும் பெருமாள்’ படத்துலயும் என்கிட்டமுழுக்கதை எல்லாம் சொல்லல. இருந்தாலும் அவரை நம்பி போனேன். இந்தப் படத்துல என்னுடைய கேரக்டர் நல்லா பேசப்படக்கூடியதாக இருக்கும்.குறிப்பாக, மாரி செல்வராஜ் ஊர் மக்களுக்கு நன்றி சொல்லணும். அவங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், மாரி சொன்னதற்காக வந்து வெயில், மழை என்று பாராமல் நடித்தார்கள்" எனப் பேசினார்.

actor yogi babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe