Skip to main content

“இதுவும் சீர்திருத்த படம்தான்” - முதல்வருக்கு ஒய்.ஜி. மகேந்திரன் கோரிக்கை!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

YG Mahendran's request to the Chief Minister!

 

இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆன்மீகத்தில் சமூகப் புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் டி.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.

 

ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது “இந்தக் கால இளைஞர்களுக்கு இந்தப் படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. இதுவும் சீர்திருத்த படம்தான். இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்; அனைத்து பள்ளிகளிலும் இந்த படம் திரையிட வேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வருக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பேசும்போது நீ குறுக்கப் பேசாத” - மேடையில் கோபப்பட்ட ராதாரவி!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

 "You don't interrupt when I'm talking" - Radharavi angry on stage

 

இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீஇராமானுஜர். ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீஇராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் டி.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி கூறுகையில், “இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது. நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்திருத்தக் கருத்துகளைப் பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர். 

 

சீர்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்க வைப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்கச் சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். "உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்" என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம்" என்றவர், "நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி வாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக் கொள்ளனும்" என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். 

 

நான் சொல்லித்தான் இதில் அவர் நடித்தார் என ஒய்.ஜி சொன்னார். அப்படியெல்லாம் யாரையும் திரி போல தூண்டிவிட முடியாது என்று ராதாரவி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் உட்கார்ந்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் குறுக்கிட்டார். அதற்கு நான் பேசும் போது நீ குறுக்கப் பேசாத என்றார் ராதாரவி. பேசுவதை ஒழுங்கா பேசு என்றார் ஒய்.ஜி.மகேந்திரன். இது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. 

 


 

Next Story

"பல நூற்றாண்டு சகோதரத்துவ அன்பை ஆழப்படுத்துவோம்" - ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

corona

 

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்தேர்தல் முடிவுகளின்படி, தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களை வென்றது. இதனைத்தொடர்ந்து ஸ்டாலின் இன்று (07.05.2021) முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

 

இதனைத்தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்பிற்குரிய மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வராக நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் இந்தவேளையில், நீங்கள் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். பல நூற்றாண்டுகளாக கேரள மக்களும் தமிழர்களும் பகிர்ந்துகொண்டுவரும் சகோதர அன்பை நாம் மேலும் ஆழப்படுத்துவோம் என்றும், சிறப்பான இந்தியாவிற்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றும் நம்புகிறேன்" என கூறியுள்ளார்.