Skip to main content

கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது குற்றம் சொல்வதா? - மருத்துவமனையில் யாஷிகா உருக்கம்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

vdbgdsb

 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார், நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில், அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், விபத்திற்கு பிறகு கண்விழித்த நடிகை யாஷிகா முதல்முறையாக விபத்து குறித்து உருக்கமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

bfdshdfh

 

"நான் தற்போது கடந்துகொண்டிருக்கும் வலியை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. உயிர் பிழைத்ததற்காக வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்விலேயே இருக்கப் போகிறேன். எனக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்தக் கோரமான விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நான் நன்றி சொல்வதா? அல்லது என் உயிர்த் தோழியை என்னிடமிருந்து பிரித்துச் சென்றதற்காக வாழ்நாள் முழுவதும் கடவுளைக் குற்றம் சொல்ல வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் பவனி. நீ என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். உன் குடும்பத்தை ஒரு மோசமான சூழ்நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டேன். 

 

bfdndn

 

ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. இனி குற்றவுணர்விலேயே வாழப் போகிறேன். உன் ஆன்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வர பிரார்த்திக்கிறேன். ஒருநாள் உன் குடும்பம் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். நம் நினைவுகளை நான் என்றென்றும் போற்றுவேன். எனது பிறந்தநாளை நான் கொண்டாடப் போவதில்லை. என் ரசிகர்களையும் எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்; தயவுசெய்து அவளுடைய குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அவர்களுக்கு அதிக வலிமையைக் கொடுக்க வேண்டும். என் வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு இது. தயவுசெய்து ஒருநாள் என்னை மன்னித்துவிடு. ஐ மிஸ் யு!" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எஸ்.ஜே சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

Release date announcement of SJ Surya film; The film crew released the new posters

 

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் 'கடமையை செய்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு, அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது. 

 

 

 

Next Story

"எனக்கு லவ் எல்லாம் செட்டாகாது" - திருமணத்தை அறிவித்த யாஷிகா ஆனந்த்

Published on 01/04/2022 | Edited on 02/04/2022

 

Yashika announces his marriage

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'சாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தியை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இது செட்டில்ட் ஆக வேண்டிய நேரம். சினிமா எனக்கு பிடிக்கும், அதனால் உங்களை தொடர்ந்து மகிழ்விப்பேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், லவ் எல்லாம் செட் ஆகாது" எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் யாஷிகாவின் அடுத்த பதிவில், "வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்து எனக் கூறி, தற்போது எனக்கு திருமணம் இல்லை" எனத்  தெரிவித்துள்ளார்.