Skip to main content

யாஷிகா ஆனந்த் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

yashika aannand accident case update

 

கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. 

 

காரை ஓட்டிய யாஷிகாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார். பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலை சரியாகி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

இதனிடையே மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ஆஜராகாவிட்டால் அவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் யாஷிகா நேரில் ஆஜராகியுள்ளார். பின்பு தனது பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி ஆஜராகியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. மேலும் முன்பு கூறியது போல் அடுத்த மாதம் 25ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

yashika aannand accident case update

 

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிய யாஷிகாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

இந்த விபத்து காரணமாக அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 21 ஆம் தேதி (21.03.2023) யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் இன்று (25.04.2023) நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இன்று ஆஜராகாவிட்டால் அவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

 

இதனிடையே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மாதம் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியது. மேலும் முன்பு கூறியது போல் இன்று ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜராகியுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வருகிற ஜூலை மாதம் 27 ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


 

Next Story

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் உத்தரவு

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Court orders warrant for actress Yashika Anand

 

கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிய யாஷிகாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

இந்த விபத்து காரணமாக அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார். பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலை சரியாகி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

இதனிடையே மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் யாஷிகா கடந்த 21 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறியுள்ளது. 25 ஆம் தேதியும் ஆஜராகாவிட்டால் அவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.