தனுஷ் படத்திற்கு புதிய சிக்கல் !

yamini leave to dhanush starring naane varuven movie

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்திலும், ஆனந்த் எல். ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே' படத்திலும்நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது. இதனிடையே, தனுஷ் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால், ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருபடங்களின்பணிகளை முடித்துள்ளதால், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. ‘நானே வருவேன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி தற்போது படத்தில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "செல்வராகவன் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘நானே வருவேன்’ படத்திலிருந்து நான் விலக முடிவெடுத்துள்ளேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘நானே வருவேன்’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக முதலில் அரவிந்த் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில்படத்திலிருந்து அவர் விலகவே, ‘சாணிக்காயிதம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால்தற்போது இவரும் படத்திலிருந்து விலக்கியுள்ளதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

actor dhanush naane varuven selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe