Skip to main content

"நான் உங்களைப் பற்றி பேசாத, நினைவில்கொள்ளாத நாளே இல்லை!" - நடிகை யாஷிகா வேதனை!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

gegesgsd

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம், பாலிவுட்டில் நடக்கிற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் ஓராண்டாகிறது. இதையொட்டி #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்துவருகின்றனர். அந்தவகையில், பிக்பாஸ் 2 புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் சுஷாந்த் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்... "இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இதுவரை உங்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை. நாங்கள் உங்களைப் பற்றி பேசாத, நினைவில்கொள்ளாத நாளே இல்லை! உள்ளேயும் வெளியேயும் அத்தகைய அற்புதமான நபர் நீங்கள். ஆனால் உங்களைச் சுற்றியிருந்த எல்லோரும் நல்லவர்கள் இல்லை. நீங்கள் நிம்மதியான இடத்தில் இருக்கிறீர்கள் என நம்புகிறோம். உங்களை மேலும் மேலும் நேசிக்கிறோம்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்