Advertisment

"நாளு கெழம நல்லா இருக்கு நாட்டு நெலம சொன்ன வழக்கு" - இணையத்தில் ட்ரெண்டாகும் பா. ரஞ்சித் படத்தின் பாடல் 

writer movie first song released

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் 'ரைட்டர்' படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். இயக்குநர்பிராங்கிளின் ஜகாப் இயக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர்வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4e127ddd-0ea9-4c21-8eab-214746438b55" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_29.jpg" />

Advertisment

இந்நிலையில் ரைட்டர் படத்தின் முதல் பாடலான'அடி அடி' என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை யுகபாரதி எழுத்தில், கோவிந்த் வசந்தா இசையில் அந்தக்குடி இளையராஜா மற்றும் லக்ஷ்மி சந்துருஇருவரும் இணைத்து பாடியுள்ளார். மக்களின் பிரச்சினைகளை பேசியுள்ள இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Pa Ranjith samuthirakani writer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe