Skip to main content

மாட்டுக்கறி உண்பதை பெரிய பிரச்சனையாக மாற்றுவது ஏன்? - துஷாரா விஜயன் கேள்வி!

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Dushara Vijayan

 

அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை சை.கெளதமராஜ்  எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக படக்குழுவினரை சந்தித்தோம். படக்குழுவினர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

 

துஷாரா விஜயன் பேசியதாவது, “சார்பட்டா பரம்பரை படத்தில் என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அருமையான ஒரு உணர்வு அது. கழுவேத்தி மூர்க்கன் படத்தில் நான் செய்துள்ள கவிதா கேரக்டரும் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எனக்குள் இருக்கும் கேரக்டர்களைத் தான் நான் திரையில் வெளிப்படுத்துகிறேன். அத்தனை கேரக்டர்களிலும் சவால்கள் இருக்கின்றன. இயக்குநர்கள் மனதில் நினைத்த ஒரு கேரக்டருக்கு நாம் உயிர் கொடுப்பது முக்கியமான விஷயம். நான் ஒரு கேரக்டர் செய்யும்போது இன்னொரு படத்தின் கேரக்டர் உள்ளே வராது. 

 

ஊரில் திருவிழா நேரங்களில் மொட்டை மாடியில் உட்கார்ந்து விளையாடிய நினைவுகள் எல்லாம் அருமையானவை. அருள்நிதி என்னிடம் கோபப்பட்டதில்லை. அவர் ஜாலியான மனிதர். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும். நான் சமீபத்தில் தான் மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பித்தேன். நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று தெரிவித்ததை வைரல் ஆக்கினார்கள். நான் சிக்கன் சாப்பிட்டேன் என்று சொன்னால் அது சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படும். மாட்டுக்கறி உண்பதை மட்டும் பெரிய பிரச்சனையாக மாற்றுவது ஏன்? 

 

நான் செய்யும் அனைத்து படங்களையும் விரும்பியே செய்கிறேன். என் சுற்றுப்புறத்தை நன்றாக கவனித்து, என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களையே என்னுடைய கேரக்டர்களுக்கான இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்கிறேன். கழுவேத்தி மூர்க்கன் பட ஷுட்டிங் உச்சி வெயிலில் தனுஷ்கோடியில் நடந்தது. ஆனால் ரிஸ்கான வேலைகள் அனைத்தையும் செய்தால்தான் நல்ல படம் உருவாகும். சார்பட்டா 2 படம் நடப்பதே அந்தப் படத்தின் போஸ்டர் பார்த்து தான் எனக்குத் தெரியும். அந்தப் படத்தில் நான் இருக்கிறேனா என்பது தெரியவில்லை.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இலக்கை அடைந்த தருணம்...” - துஷாரா விஜயன் பெருமிதம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
dhushara vijayan about raayan movie and dhanush

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவுப் படம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளதாகப் படக்குழு அவர்களது கதாபாத்திர லுக் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு உறுதி செய்தது. இதையடுத்து பிரகாஷ் ராஜ் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், துஷாரா விஜயன் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக துஷாரா விஜயன், “இந்த படம் எனக்கு ஒரு கிஃப்ட். கனவு நனவான தருணம் என்று சொல்வதை விட இலக்கை அடைந்த தருணமாகத்தான் நான் பார்க்கிறேன். தனுஷ் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் இயக்கத்தில் நடித்ததை தாண்டி அவருடன் நடிப்பதை கூடுதல் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“அழகாக இருக்கிறது” - துஷாரா விஜயன் நன்றி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

dushara vijayan thanks note for aneethi response

 

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் 'அநீதி'. இப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

 

இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன், இந்த படத்திற்காக கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சவால் நிறைந்த மற்றும் ஒரு கலைஞனாக எனது வளர்ச்சிக்கு உதவும் கதாபாத்திரங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் திரையுலகில் எனது பயணத்தைத் தொடங்கினேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, புதிய களங்களை ஆராயவும், புதிய கதாபாத்திரங்களில் வாழவும், அவர்களின் கதைகளுக்கு உயிர் கொடுக்கவும் எனக்கு சில அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தது. 

 

அந்த வகையில் இன்னொரு நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் அநீதி படத்தில் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. அதனை மக்கள் பாராட்டுவதை பார்க்கும் போது அழகாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் "அனைவரின் ஆதரவும் ஊக்கமும் என்னை மேலும் கடினமாக உழைக்கவும் எதிர்காலத்தில் இன்னும் சிறந்த நடிப்பை கொடுக்கவும் தூண்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.