10 ஆண்டுகளுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பாடல்

why this kolaveri di dhanush song controversy after 10 years back

தமிழ் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் 3. அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் சிறுசு முதல் பெருசு வரை அனைத்து தரப்பினரிடையே ஹிட்டடித்து யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து. மேலும் இந்த பாடல் தற்போது வரை பலரின் விருப்ப படலாகவே உள்ளது.

இந்நிலையில் இப்பாடல் வெளியாகி 10 வருடங்கள் கழித்து தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. துருக்கி நாட்டின் குளிர்பானவிளம்பர பாடலை பார்த்துதான் 'ஒய் திஸ் கொலவெறி' பாடலை தமிழில் உருவாக்கியுள்ளனர் என்று கூறி சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த விளம்பர பாடல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் கடந்த 2012 ஆம் ஆண்டே வெளியாகி விட்டது என்று கூறி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

actor dhanush aishwarya rajinikanth anirudh
இதையும் படியுங்கள்
Subscribe