Advertisment

"சமந்தாவை பார்த்தல் ஹாய் சொல்லி கட்டிப்பிடிப்பேன்" - நாக சைதன்யா

publive-image

Advertisment

தெலுங்கில் முன்னணி நடிகராக வளம் வரும் நாக சைதன்யா தற்போது இந்தியில் அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, நாக சைதன்யாவோடு மோனா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d96b5165-dac0-4cf7-8edf-04ab9bb0d2c8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_6.jpg" />

இந்நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் முழுவீச்சுடன் படக்குழு ஈடுபட்டுவருகிறது. அதில் ஒரு பகுதியாக நாகசைதன்யாஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா, "ஒரு ஹாய் சொல்லி கட்டிப்பிடிப்பேன்" என ஜாலியாக சொன்னார். மேலும் கையில் உள்ள டாட்டூ பற்றி கேள்வியெழுப்பியதற்கு, "சில ரசிகர்கள் நான் கையில் போட்ட டாட்டூவை போன்றே வரைந்திருக்கிறார்கள். இந்த டாட்டூ என் திருமண நாளை குறிக்கும் வகையில் உள்ளது. அதனால் ரசிகர்கள் யாரும் இந்த டாட்டூவை வரைய வேண்டாம்" என்றும் அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இல்லை என்றும் நாக சைதன்யா கூறியுள்ளார் .

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe