Skip to main content

தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன பிரச்சனை? - இயக்குனர் சுப்ரமணியம் சிவா

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

தனுஷ் நடிகராக அறிமுகமான ஆரம்ப காலத்தில்  ‘திருடா திருடி’ என்றொரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சுப்ரமணியம் சிவா, தற்போது இவர் தனுஷ் ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார். பல வருடங்கள் தனுஷுடனேயே பயணித்து வருகிறார் என்றும் கூட சொல்லலாம். பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘வெள்ளை யானை’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை, வாக்குவாதம் என்றெல்லாம் பேசப்படுகிறதே என்று நமக்கு அவர் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து சுப்ரமணியம் சிவா கூறுகையில்,
 

subramaniam

 

 

“தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து இருக்கிறார். எதிர் நீச்சல் எடுக்கும் சமயத்தில் நான் தனுஷிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார், சிவா நல்ல ஹீரோ பிரசன்ஸ் இருக்கு. மூனு படத்திலேயே நான் அதை உணர்ந்தேன். அதனால்தான் எதிர்நீச்சல் படம் அவரை வைத்து பண்ணுகிறேன் என்றார். அப்படிதான் காக்கிச்சட்டை படமும் தயாரித்தார். சினிமாவில் மட்டும் இல்லை சாதாரனமாக ஊர்பக்கங்களில் பார்த்தால் கிழவிகள் எல்லாம் புரளி பேசுவார்கள் அதுபோலதான் இது. இரண்டு ஹீரோக்களை பற்றி தவறான விஷயங்கள் பேசினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று இப்படி கிளப்பிவிடுகிறார்கள். நம் வாழ்க்கையில் கெட்டவன் இருந்தா ரசிப்போமா? ஆனால் சினிமாவில் கெட்டவன் இருந்தால் ரசிப்போம். அதைபோல கதை பேசிக்கொள்ள ஒரு திருடனோ, கெட்டவனோ, அல்லது கெட்ட விஷயங்களோ தேவைப்படுகிறது. ஒரு உரையாடலுக்கு கெட்ட விஷயங்கள் தேவை அப்போதுதான் அது சுவாரஸ்யப்படும். நல்ல விஷயங்களை நிறைய நேரம் பேசி சுவாரஸ்யப்படுத்திக்கொள்ள முடியாது. 
 

அதுபோலதான் காசிப். நான் அவனை பார்த்தேன் என்று சொல்வேன். இன்னொருவன் இருட்டில் பார்த்தேன் என்று சொல்வான். இன்னொருவன் இருட்டு மட்டுமல்ல அவருடன் ஒரு பெண்ணும் இருந்தால் என்று சேர்த்து சொல்வான். இப்படி கற்பனை ஏறி சுவாரஸ்யத்தை கூட்டிக்கொண்டே போகும். தனுஷ்கூட இருக்கும்போது சிவா பற்றி பாஸிட்டிவாகதான் பேசிக்கொள்வோம், நெகட்டிவாவே பேசிக்கொள்ள மாட்டோம். தனுஷுக்கு எப்போதும் நெகட்டிவாக பேசினால் பிடிக்காது. தனுஷும் சிவாவும் நேரில் ஒருநாள் மீட் செய்துகொண்டால் நம்பெல்லாம் இப்படிதான் பேசிக்கிறோமா என சிரிப்பார்கள். சிவாவே ஒரு பத்திரிகையில் தனுஷ் எனக்கு குரு மாதிரி என்று சொல்லியிருக்கிறார். சின்ன சின்ன குறைகள் வந்துதான் போகும், ஆனால் நேராக பார்த்தால் சரியாகிவிடும். இதில் காசிப்தான் நிறைய இருக்கிறது” என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.