Skip to main content

மோசடி வழக்கு; விஜய் பட நடிகைக்கு மீண்டும் பிடி வாரண்ட்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Warrant issued against Ameesha Patel in cheque bounce case

 

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து 'டெசி மேஜிக்' (Desi Magic) என்ற இந்தி படத்தை தயாரிக்க முடிவு செய்து, அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார். 

 

அப்போது 2018ல் இப்படம் திரைக்கு வந்துவிடும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்றும் அமீஷா கூறியுள்ளார். பின்பு 2013ல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டபடி படம் முடிக்கப்படவுமில்லை திரைக்கும் கொண்டு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். வாங்கிய கடன் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ.2.5 கோடி மற்றும் ரூ.50 லட்சம் என இரண்டு செக் அமீஷா பட்டேல் கொடுத்துள்ளார். அமீஷா கொடுத்த செக்கை அஜய் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய், நீதிமன்றத்தை நாடி, அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அமீஷா நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாததால் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த ராஞ்சி நீதிமன்றம், அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது. மேலும் வருகிற 15 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.  

 

இதே போல் யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் 32.25 லட்சம் கடன் வாங்கி, அவர்களுக்கு திருப்பி கொடுத்த செக்கில் பணம் இல்லாததால் மோசடியில் ஈடுபட்டதாக கூறி அந்நிறுவனம் மத்தியப் பிரதேச போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. போபால் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் பட நடிகைக்கு கடைசி வாய்ப்பளித்த நீதிமன்றம்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

actress ameesha patel check bounce case update

 

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல், தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்தவர். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து 'டெசி மேஜிக்' (Desi Magic) என்ற இந்தி படத்தை தயாரிக்க முடிவு செய்து, அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார். 

 

அப்போது 2018ல் இப்படம் திரைக்கு வந்துவிடும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்றும் அமீஷா கூறியுள்ளார். பின்பு 2013ல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டபடி படம் முடிக்கப்படவுமில்லை திரைக்கும் கொண்டு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். வாங்கிய கடன் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ.2.5 கோடி மற்றும் ரூ.50 லட்சம் என இரண்டு செக் அமீஷா பட்டேல் கொடுத்துள்ளார். அமீஷா கொடுத்த செக்கை அஜய் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய், நீதிமன்றத்தை நாடி, அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அமீஷா நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாததால் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையில் அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ராஞ்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17 ஆம் தேதி அமீஷா பட்டேல் நீதிமன்றத்தில் ஆராஜனார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி, ஜூன் 21 ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி தெரிவித்தார். ஆனால் இன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. மொஹாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவசரமாக பங்கேற்றதால் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது வழக்கறிஞர் இன்னும் சிறிது கால அவகாசம் கேட்டு நீதிபதியிடம் கேட்டார். இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி நடிகைக்கு கடைசி வாய்ப்பாக ஆஜராகுமாறு தெரிவித்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். 

 

 

Next Story

மோசடி வழக்கில் விஜய் பட நடிகைக்கு வாரண்ட்

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Warrant for actress Amisha Patel in Czech fraud case

 

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். சொந்தமாகத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் 32.25 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதனைத் திருப்பி தரும் வகையில் நடிகை அமீஷா பட்டேல் 2 தவணையாக  அந்நிறுவனத்திற்கு செக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக்கில் குறிப்பிட்டிருந்த  வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால்  அதிர்ச்சியடைந்த யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மத்தியப் பிரதேச போபால் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

 

ad

 

இதையடுத்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் நடிகை அமீஷா பட்டேல் முறையாக ஆஜராகாமலிருந்தார். இது தொடர்பான வழக்கு நேற்று (1.12.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகை அமீஷா பட்டேலுக்கு நீதிபதி ஜாமீன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். மேலும் வரும் 4 ஆம் தேதி கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.