Skip to main content

ராஷ்மிகாவிடம் 'சாரி' கேட்ட டேவிட் வார்னர்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Warner Apologises To Rashmika Mandanna

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்  கிரிக்கெட்டில் மட்டுமல்லாது தற்போது சினிமா பாடல்களை ரீல்ஸ் செய்வதிலும் சிக்சர் அடித்து வருகிறார். முன்னதாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'புஷ்பா' பட பாடலை ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்தார். இது பலராலும் ரசிக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது போக அவ்வப்போது இதுபோன்று வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

 

அந்த வகையில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்த வார்னர் இம்முறை ஒரு படி மேலே போய் நடிகர்களின் முகத்திற்குப் பதிலாக அவரது முகத்தை எடிட் செய்து கிண்டலாக வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றாக ராஷ்மிகாவின் பாடலை, ராஷ்மிகாவின் முகத்திற்குப் பதிலாகத் தனது முகத்தை எடிட் செய்து கிண்டலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவின்  கமெண்டில் ராஷ்மிகாவை டேக் செய்து "சாரி" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். 

 

ராஷ்மிகா மந்தனா இதற்கு விரைவில் கிண்டலாக ஏதாவது ரிப்ளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, தற்போது தமிழில் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில், 'மிஷன் மஜ்னு', 'அனிமல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இதனிடையே ராஷ்மிகா அவரது சிறு வயதில் குடும்பச் சூழலைப் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, "சிறு வயதில் அதிகம் கஷ்டப்பட்டோம். 2 மாதத்துக்கு ஒருமுறை வீடு மாறிக்கொண்டே இருப்போம். வாடகைக்குப் பணம் இருக்காது. எனக்குப் பொம்மை கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமையில் இருந்துள்ளோம். சிறு வயதிலிருந்தே போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் மனதளவில் இன்னும் பொம்மை வாங்க முடியாத அதே குழந்தையாகவே இருக்கிறேன். நடிப்புக்காக எனக்குக் கிடைக்கும் சம்பளம், அங்கீகாரம் அனைத்தையும் மதிக்கிறேன். இது நிலையானதல்ல என்பதை அறிந்திருப்பதால் என் சிறுவயது அனுபவங்கள், இந்தச் சாதனைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதைத் தடுக்கின்றன" எனப் பேசியுள்ளார். ராஷ்மிகாவின் இந்தப் பேச்சும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.