Skip to main content

"மிஷ்கின் பக்கத்துல உக்கார பயமா இருந்தது!" - நட்டி கிண்டல் 

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி (எ) நடராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வால்டர். அன்பு இயக்கத்தில் ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினருடன் விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

nataraj



படத்தில் நடித்துள்ள நட்டி பேசும்பொழுது, மிஷ்கின் குறித்து கலகலப்பாகப் பேசினார். மிஷ்கின், நட்டி இருவரும் நெடுநாள் நண்பர்கள். விஜய் நடித்த 'யூத்' படத்தில் வின்சென்ட் செல்வாவின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் மிஷ்கின். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் நட்டி (எ) நடராஜ். இன்று நடராஜ் பாலிவுட்டின் முக்கிய ஒளிப்பதிவாளர். சதுரங்கவேட்டை உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ள நடிகர். மிஷ்கின், இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். இந்த நிகழ்வில் இவர்கள் இருவரும் ஒருவர் குறித்து ஒருவர் மகிழ்வுடன் பகிர்ந்தனர். நட்டி பேசியது...

"மிஷ்கின் படங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. அந்தப் படத்தில் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் அளவுக்கு ஃபிரேம் முழுவதும் நிறைந்து கேமராவை பார்த்து ஒரு கதை சொல்லியிருப்பார். அதை பார்த்துட்டு, 'இது எப்படிடா பண்ணியிருப்பார். இது எப்படி சாத்தியம்?' என்று நினைச்சுருக்கேன். நான் கண்ணாடி முன்னாடி உக்காந்து அப்படியெல்லாம் பண்ணியும் பாத்துருக்கேன். இப்போதான் தெரியுது, இருட்டுல கூட கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு தெளிவா நடந்து வராரு. இவராலதான் இது முடியும்னு. இந்த ப்ராக்டிஸ் இருக்கனாலதான் இதெல்லாம் பண்ணுறாரு. பவா சார் (எழுத்தாளர் பவா செல்லத்துரை) சொன்னார் 'மிஷ்கின் ஒரு பிசாசு'ன்னு. ஆமா, பெரிய பிசாசுதான். பக்கத்துல உக்காரும்போது பயமாத்தான் இருந்தது".      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
mysskin speech in  Double Tuckerr Press Meet

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

மிஷ்கின் பேசுகையில், “தீரஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அதுபோல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் ரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் போது அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய ரசிகன், உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து, சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு 50 எம்.எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம்.எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம். ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்துகொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை. தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன்” என்றார்.

Next Story

“விஜய் போன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை” - பிரபல நடிகர் வாழ்த்து

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
sibiraj about vijay political party name

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். 

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
  
இந்த நிலையில் சிபிராஜ், “தளபதிக்கு முழு மனதுடன் தலை வணங்குகிறேன். அண்ணா தனது வார்த்தையைக் காப்பாற்றி அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஒரு ரசிகனாக அவரது படங்களை பெரிய திரையில் பார்க்கத் தவறினாலும், அவரைப் போன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை என்பதால் அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.