Skip to main content

''அவர்களுக்கு சகோதர சகோதரிகள் பலம் அளிக்க வேண்டும்'' - விவேக் இரங்கல்    

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
dw

 

‘வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்திற்குள்ளான விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உள்பட 18 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விவேக் இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

 

''கோழிக்கோடு வான்வழிப் பாதையில் ஏற்பட்ட விமான விபத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியும், உயிர் இழப்பால் வேதனையும் அடைந்தேன். காயமடைந்தவர்களுக்காக என் இதயம் வெளியே செல்கிறது. இதற்கிடையே வெள்ளம், தொற்று சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அனைத்து கேரள சகோதர, சகோதரிகளும் ஒன்றிணைந்து உதவிக் கரங்கள் நீட்டி அரசாங்கத்திற்கும், அங்குள்ள மருத்துவ ஊழியர்களுக்கும், உரத்த அழுகை கொண்ட முகங்களுக்கும் பலம் அளிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்