Skip to main content

‘மக்கள் திரைப்படம்’ - பிரகாஷ்ராஜுக்கு 'தி காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் பதில்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Vivek Agnihotri reply to Prakash Raj regards The Kashmir Files film issue

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

 

அந்த வகையில் ஷாருக்கானின் 'பதான்' படம் குறித்தும் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக கேரளாவில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ்ராஜ் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் குறித்து, "இப்படம் முட்டாள்தனமான படங்களில் ஒன்று. ஆனால், அதை தயாரித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு வெட்கமே கிடையாது. படத்தை பார்த்த சர்வதேச ஜூரி அவர்கள் மூஞ்சில் காரி துப்புவது போல் விமர்சித்தார். இந்த சூழலில் அப்படத்தின் இயக்குநர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை எனக் கேள்வி கேட்கிறார். நான் சொல்கிறேன். ஆஸ்கர் இல்லை, ஒரு பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்றார். 

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் திரைப்படமான தி காஷ்மீர் பைல்ஸ் படம் சில பேரை தூக்கமில்லாமல் செய்துள்ளது. அதில் ஒருவரான பிரகாஷ்ராஜை ஒரு வருடம் கழித்தும் தொந்தரவு கொடுத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல்” - பிரகாஷ் ராஜ்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
prakash raj shard a election viral song

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. 

அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ‘தேசத்தின் துயரக் குரல்’ என்ற தலைப்பில், ஒப்பாரி வடிவிலான பிரச்சாரப் பாடல் வெளியாகி, இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இப்பாடலை புத்தர் கலைக் குழுவைச் சேர்ந்த மகிழினி மணிமாறன் பாடியுள்ளார். இப்பாடலை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர் 

அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், இப்பாடலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல். எதை நாம்  தேர்ந்தெடுக்க போகிறோம்?” என பதிவிட்டுள்ளார்.  

Next Story

“பா.ஜ.க அதை முயற்சி செய்திருப்பார்கள்” - பிரகாஷ் ராஜ்

Published on 04/04/2024 | Edited on 05/04/2024
prakash raj replied he joining bjp

பிரகாஷ் ராஜ் கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் ராயன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

இந்த நிலையில் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக ஒருவர் பகிர்ந்த பதிவு வைரலானது. இந்த பதிவிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “அவர்கள் முயற்சி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னை வாங்கும் அளவுக்கு (சித்தாந்த ரீதியாக) அவர்கள் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள்” என கிண்டல் கலந்து குறிப்பிட்டுள்ளார்.