Skip to main content

"நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநருக்கு நீதிமன்றம் அதிரடி

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Vivek Agnihotri offers unconditional apology for contempt of court

 

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடைபெற்றபோது., பீமா கோரேகானில் உள்ள நினைவுத்தூண் அருகே ஆயிரக்கணக்கான தலித்துகள் கூடியிருந்தனர். அப்போது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் மற்றும் கல்வீச்சில் பல வாகனங்கள் உடைக்கப்பட்டன. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்

 

இந்த சம்பவத்திற்கு ஒருநாள் முன்னதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனிவர் வாடாவில் ‘எல்கார் பரிஷத்’ நடத்தப்பட்டது. இதில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், சோனி சோரி, பி.ஜி. கோல்சே பாட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில், பீமா கோரேகான் வன்முறைக்கு இந்தக் கூட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

 

இந்த வழக்கு தொடர்பாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, கடந்த 2018ஆம் ஆண்டு  தனது ட்விட்டர் பக்கத்தில், பீமா கோரேகான் வழக்கில் நீதிபதி எஸ். முரளிதர் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியதாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் விவேக் அக்னிஹோத்ரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் தனது வழக்கறிஞரின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். பின்பு கேள்வி எழுப்பிய நீதிபதி, நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிக்க அவருக்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதா? வருத்தத்தை எப்போதும் பிரமாணப் பத்திரம் மூலம் வெளிப்படுத்த முடியாது. அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று விவேக் அக்னிஹோத்ரியின் வழக்கறிஞர்களிடம் கூறி உத்தரவிட்டார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Next Story

தனுஷை சந்தித்த சிதம்பரம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
manjummel boys director chidambaram meets dhanush

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் பேசப்படுகிறது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களுடன் படமும் பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் சிதம்பரம் தனுஷை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.