zsgewg

கரோனா காரணாமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாவதாகத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து கண்டனம் தெரிவித்து நடிகர் விவேக் சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

Advertisment

''பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்'' எனப் பதிவிட்டுள்ளார்.