Skip to main content

நயன்தாராவுடன் வண்ணமயமான பாடல் காட்சி.... விஸ்வாசம் அப்டேட்ஸ்...

Published on 08/05/2018 | Edited on 09/05/2018

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக நேற்று தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்ற புகைப்படங்களும் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. வீரம் படத்தை போல் கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து 25 நாட்கள் நடத்த  படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதில் முதல் மூன்று நாட்கள் பாடல் காட்சியையும், பின்னர் ஆக்‌ஷன் மற்றும் கிராம சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

மேலும் இப்படத்தின் முதல் நாளான நேற்று திருவிழா போன்ற வண்ணமயமான செட்டில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கக்கட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த பாடல் காட்சி செட்டின் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் நாயகி நயன்தாராவும் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அஜித்தைப்போல் நயன்தாராவும் ஹைதராபாத் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

எப்பவேணா ஆபீசுக்கு வாங்க...டிடெயில்ஸ் தரோம்...! விஸ்வாசம் விநியோகஸ்தர் அதிரடி அழைப்பு...!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
viswasam

 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் - நயன்தாரா இணைந்து நடித்து பொங்கலன்று வெளியான 'விஸ்வாசம்' படம் வெற்றிகரமாக 4 வாரங்களை கடந்து 5வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் குறித்து சமீப நாட்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்.... 

 

 

"விஸ்வாசம் படம் எல்லா சந்தேகங்களையும் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. விநியோகஸ்தர் என்ற முறையில் 'விஸ்வாசம்' படம் சரித்திரம் படைக்கும் வெற்றி பெற்றதை கர்வமாகவும், நமபிக்கையுடனும் இதன் மூலம் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுடைய கவலைகளுக்கும், கேள்விகளுக்கும் எங்களுடைய அலுவலக கதவு எப்போதும் திறந்தே இருக்கும். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பங்குதாரர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் இது லாபகரமாக அமைந்துள்ளதால் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இதை கொண்டாட ரசிகர்களாகிய உங்களுக்கு நேரம் வந்துவிட்டது. சந்தேகமே இல்லாமல் 'விஸ்வாசம்' ஒரு மிகப்பெரும் வெற்றி படம்" என அறிவித்துள்ளனர்.

 


 

Next Story

பேட்ட, விஸ்வாசம் இதில் எந்த படம் வசூலில் அதிகம்...? உண்மை நிலவரம் இதோ..!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
vp

 

பேட்ட படமும், விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் திரையரங்குகள் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில் இரண்டு படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்க பட்டுள்ளது. அதில்... "இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.

 

 

சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம் என்பதால் பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும். தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. மேலும் இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.