Skip to main content

வசூல் தகவலிலும் போட்டிப் போடும் பேட்ட, விஸ்வாசம் தயாரிப்பு நிறுவனங்கள்...

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
viswasam


பொங்கல் பண்டிகையின் விடுமுறையை முன்னிட்டு அஜித் நடிப்பில் விஸ்வாசமும், ரஜினி நடிப்பில் பேட்ட படமும் கடந்த 10ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியான நாள் முதலே இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு படக்குழுவும் அதிகாரப்பூர்வ வசூலை தெரிவித்துள்ளது.
 

முதலில் ரஜினியின் பேட்ட படம், உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்திருந்தது என்று தகவல் வெளியாக. அதனை தொடர்ந்து விஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் மட்டுமே 125 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
 

இந்த இரு படங்களில் தமிழ்நாட்டில் விஸ்வாசம் நல்ல ஓட்டமும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பேட்ட படமும் வசூலை வாரி குவித்து வருவதாக வெளியான தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. 
 

இவ்விரு படத்தின் தயாரிப்பாளர்களும் ட்ரைலரில் போட்டிபோட்டுகொண்டது போலவே, யார் வசூல் வேட்டையில் முதலிடம் என்று போட்டிபோட்டு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் நூறு கோடியை 11 நாட்களில் வசூல் செய்த படம் பேட்ட என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவிக்க, தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வாசம் 125 கோடி என்று விஸ்வாசம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை சேர்க்காமல் மற்ற நாடுகளில் மட்டும் 65 கோடி என்று பேட்ட படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.