Skip to main content

நடிகர் சூரி குறித்து முதல் முறையாக மனம் திறந்த விஷ்ணு விஷால்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

vishnu vishal

 

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷாலுக்கு இடையேயான நட்பில் விரிசலை ஏற்படுத்தியது,  நிலப்பிரச்சனை விவகாரம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

நடிகர் விஷ்ணு விஷால், தனியார் விடுதியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தன்னுடைய அடுத்தடுத்த படங்கள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அப்போது, நடிகர் சூரி விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்குப் பதிலளித்த விஷ்ணு விஷால், "இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து என்னால் நிறைய பேச முடியாது. அவர் கொடுத்த புகாரில் தொடங்கி இன்று வரை நடக்கும் அனைத்தையும் ஒவ்வொன்றாக நான் கூற முடியும். நான் அவருடன் 10 வருடம் பழகியிருக்கிறேன். பின், அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லமால் ஆகிவிடும். எனக்கும் என் அப்பாவிற்கும் இதில், சம்பந்தம் கிடையாது. சில வருடங்களுக்கு முன்னால், 'என் அப்பா காலில் விழுந்து நீங்கள்தான் என்னுடைய கடவுள்' எனக் கூறிய ஒருவர், இன்று என் அப்பாவையும் என்னையும் ஃபிராடு எனக் கூறுகிறார். லாக்டவுன் ஆரம்பிச்ச சமயத்துல எங்க அப்பாவை நான் எங்கேயும் வெளியே போக அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் கோர்ட் கேஸூ, வக்கீலை போய் பார்ப்பது என ரொம்ப அலைந்தார். எனக்கே பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. உண்மை ஒருநாள் வெளியே வரும். சூரி மூலமா சம்பாதித்து நான் வாழனும்கிற அவசியம் எனக்குக் கிடையாது. என் அப்பா கூலி வேலை பார்த்து, மாடு மேய்ச்சு, படிச்சு ஒரு ஐ.பி.எஸ் ஆஃபிசரா இந்த நிலைமைக்கு வந்திருக்காரு. அவர் வாழ்க்கைல பார்க்காததையா சூரி எங்களுக்குக் கொடுக்க போறாரு. அவரை யாரோ தவறாக வழிநடத்துறாங்க; அதை அவர் முழுசா நம்புறார். இது ஐந்து வருஷத்துக்கு முன்னால நடந்த கதை. இதுல பேசுனா நிறைய பேசலாம்" எனக் கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
vishnu vishal once again joined with gatta kusthi movie director

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இது குறித்து பேசிய விஷ்ணு விஷால், “கட்டா குஸ்தி படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பு தான் எங்களை மீண்டும் இணைய வைத்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.