கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகமான 'கும்கி 2' தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரபு சாலமனே இப்படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் நாயகனாக விஷ்ணு விஷால் நடிப்பதாக நேற்று தகவல் வெளியானது. மேலும் கேரளாவில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணு கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் நடிப்பதாக வந்த தகவலை மறுத்துள்ளார். மேலும் இது குறித்த விளக்கத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.... " 'ஹாதி மெரே சாதி' ஹிந்தி படத்தின் தழுவலாக உருவாகும் தமிழ், தெலுங்கு பதிப்பில் இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் ராணா டகுபதி உடனும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இது எனது முதல் நேரடி தெலுங்கு படம். 26 நாட்கள் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது மூணாரில் நிறைவடைந்துள்ளது. இது 'கும்கி 2' படம் இல்லை. அதே சமயம் இது ரீமேக் படமும் இல்லை. படத்தில் டைட்டில் விரைவில் வரும்" என பதிவிட்டு விளமளித்துள்ளார்.
கும்கி 2 வில் விஷ்ணு விஷால்....? ட்விட்டரில் விளக்கம்
சார்ந்த செய்திகள்
Next Story
எம்.ஜி.ஆருக்கு பிறகு பிரபு சாலமன்
கடந்த 2012 ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் புதுமுகங்களாக அறிமுகமான 'கும்கி' படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரபுசாலமன் இயக்கத்தில் 'கும்கி 2' படம் உருவாகி வருகிறது. நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி,சூசன், கோலங்கள் திருச்செல்வம்,ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன்,மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'இதயக்கனி' படப்பிடிப்பிற்கு பிறகு 'கும்கி 2' படப்பிடிப்பு தான் அங்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் குறித்து பிரபு சாலமன் பேசும்போது.... "இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப் பட்டோம். ஒன்று யானை, அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி, இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம். நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம்" என்றார்.
Next Story
புதுமுகங்களுடன் 'கும்கி 2' வில் களம் இறங்கிய பிரபுசாலமன்
விக்ரம் பிரபு, லஷ்மி மேனன் நடிப்பில் உருவான 'கும்கி' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்திய அவர் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் சத்தமில்லாமல் நிறைவு செய்துள்ளார். மேலும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கின்ற நிலையில் 'கும்கி 2' படத்தை குறித்து முதன்முறையாக வாய் திறந்த பிரபுசாலமன்.... "கும்கி' படத்திற்கும், 'கும்கி 2' படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடர வேண்டி இருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் 'கும்கி 2' படத்தின் கதையாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் அனுமதி கிடைக்கல, அனுமதி கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக 'கும்கி 2' இருக்கும். வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாகவே இருக்கும்" என்றார்.