சென்ற ஆண்டு சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டும் அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான திரையுலகினர் திரண்டு வந்து விழாவை சிறப்பித்தனர். இதையடுத்து இந்த புதிய கட்டிட நிதிக்காக சென்ற ஆண்டு இறுதியில் மலேஷியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் கிடைத்த வருவாயை வைத்து தற்போது நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இக்கட்டிடம் கட்ட நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். இக்கட்டிடத்தின் சிறப்பு அம்சமாக கட்டிடத்துடன் இணைத்து, ஒரு சிறிய திருமண மண்டபமும், பிரிவிவ் தியேட்டர் ஒன்றும் இணைத்து கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை நேரில் சென்று பார்வையிட்ட விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சங்க கட்டிடம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்..."நடிகர் சங்க கட்டிடம் அழகாகவும் சிறப்பாகவும் உருவாகி வருகிறது" என பதிவிட்டு அதோடு கட்டிட பணியாளர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகர் சங்க கட்டிடத்தில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க மண்டபத்தில் திருமணத்திற்கு தயாராகும் விஷால்...
சார்ந்த செய்திகள்
Next Story
பாலியல் வன்கொடுமை பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டிக்க வேண்டும் - தென்னிந்திய நடிகர் சங்கம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது. இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம். இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம்.
அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம். அலைபேசியில் உள்ள இணையதளங்கள், முகநூல், வாட்ஸ்அப், போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை ...! அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
Next Story
'புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்த தகவல் தவறு..' - விஷால் அதிரடி அறிவிப்பு !
விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார் என்றும் சமீபத்தில் செய்திகள் பரவின. மேலும் அவரது புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து விஷால் தரப்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்...
"நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும். முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.