Skip to main content

சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்.... விஷால் போட்ட புதிய ட்வீட் 

Published on 18/04/2018 | Edited on 19/04/2018
vishal


பட அதிபர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் தொடர்ந்து 49 நாட்கள் செய்து வந்த வேலை நிறுத்தம் காரணமாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக நடிகரும், தயரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் நேற்று அறிவித்திருந்தார். மேலும் பேச்சுவார்த்தையில் திரைஉலக பிரச்சினைகள், தியேட்டர் அதிபர்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணத்தை குறைப்பது, டிக்கெட் விற்பனையை கணினி மயம் ஆக்குவது, கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக பேசிய அனைத்திலும் உடன்பாடு ஏற்பட்டதாகவும், மேலும் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்த விஷால் தற்போது இது குறித்து புதிய ட்வீட் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."தமிழ் சினிமாவில் ஒரு மாதத்ததுக்கு மேலாக நடந்து வந்த சீரமைப்பு முடிவுக்கு வந்தது. படங்கள் விரைவில் திரைக்கு வரும். டிஜிட்டல் சேவையில் இ-சினிமா 50 சதவீத விலையை குறைத்துள்ளது. டி சினிமாவுடனும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறோம். ஜூன் முதல் டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்படும், மேலும் சினிமா டிக்கெட்டுகள் இணையதளத்திலேயே விற்பனை செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளித்த பெப்சி நிறுவனம் மற்றும் ஆர்.கே செல்வமணி சாருக்கு நன்றி, தமிழ் சினிமாவுக்கு நன்றி. தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு சார், வீரமணி சாருக்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு இனி நல்ல நேரம் ஆரம்பம். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"இது திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ghgh

 

 

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா சார்ந்த அனைத்து வேலைகளும் மத்திய அரசின் உத்தரவின் படி இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் ஆரம்பமானது. இருந்தும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருந்து வரும் நிலையில் தியேட்டர் அதிபர்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தியேட்டர்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில்...

 

"தமிழ்நாடு திரையரங்குகள் விரைவில் திறக்கப்படாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது ரிலீசுக்காக காத்திருக்கும் அனைத்து திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்குகிறது. அடுத்த 6 மாதங்களில் குறைந்தது 30 தமிழ் திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளது.

 

 

Next Story

நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழ் பட இயக்குனர்கள்!

Published on 31/10/2019 | Edited on 01/11/2019

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இன்று காலை வழங்கினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்து அவர் பேசியபோது... 

 

ns

 

''இன்று காலை 10 மணி அளவில் மதிற்பிற்குரிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஆர்.கே செல்வமணி, பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணை செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் எங்களின் கோரிக்கையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஆண்டிற்கு அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும், திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெரும் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் கிளையை சென்னையிலும் அமைக்கவேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகளை இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

 

 

மேலும் டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் விவாதித்தோம். அப்போது அவர் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நன்கு பதிலளித்தார். மேலும் உடனடியாக விலங்குகள் நல வாரியம் அமைச்சரை தொடர்புகொண்டு அவர்களுடன் வரும் 4ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்திடவும், அதில் அவருடன் நாங்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்து, அதில் நல்ல முடிவு கிடைக்க வழி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பிலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பிலும் எங்கள் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.