Advertisment

‘நீதியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு’- விஷால் உருக்கம்

23ஆம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் தென்சென்னை மாவட்ட பதிவாளர். ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன்பின்னர் தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Advertisment

vishal

இதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை. இறுதி வரை நடிகர் சங்க கட்டிடத்திற்காக போராடுவேன்’ என விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தமுறை நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதற்கு நடிகர் சங்கம் முறையாக அனுமதி வாங்காததால் தேர்தல் தற்போது எங்கு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்படவில்லை.

vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe