Skip to main content

'அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து....' மீடூ குறித்து விஷால் 

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
vishal

 

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி' 2 படம் வரும் விஜயதசமியை முன்னிட்டு 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது அதில் பேசிய விஷால் மீடூ குறித்து பேசியபோது.... "நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். #METOO வுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்கு தான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன். பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும்.

 

 

 

மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும், கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அதே போல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க இது ஒன்னும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நாயகனுடன் படம்...! மீண்டும் இயக்கும் குட்டிப்புலி நடிகர்

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறிய மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி வரிசையில் இப்போது  இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

 

saravana sakthisss


தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்த இவர் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெற்று வசூல் செய்தது. இதையடுத்து அவர் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் சமீபத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் அஜித் ரசிகரை மையப்படுத்தி உருவான பில்லா பாண்டி படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் இவர் நடிப்பதற்கிடையில் விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்பரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

 

Next Story

சண்டக்கோழி 2வில் கார்த்தி....லிங்குசாமி வெளியிட்ட புதிய தகவல் 

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
lingusamy

 

 

 

விஷால், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள 'சண்டக்கோழி 2' படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ள இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...."சண்டக்கோழி 2' படத்தில் பின் குரல் கொடுத்ததற்காகவும், இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.