Skip to main content

கத்திச்சண்டை டீமுடன் இணையும் சுந்தர் சி 

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
vishal

 

 

'சண்டக்கோழி 2' படத்திற்கு பிறகு 'அயோக்யா' படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆக்சன், காமெடி என கமர்சியல் படமாக உருவாகும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளனர். மேலும் விஷால், சுந்தர்.சி மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கவுள்ளார். ஏற்கனவே தமன்னா, ஜெகபதி பாபு ஆகியோர் 'கத்திச்சண்டை' படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''என்னை காமெடி இயக்குநர்னு முத்திரை குத்திட்டாங்க. அதனால இதை செய்கிறேன்'' - சுந்தர். சி ஆதங்கம்!

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படமாக உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் சுந்தர்.சி பேசியபோது....

 

vishal

 

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். பிறகு “ஆக்‌ஷன்” படம் மூலம் மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகன் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. படப்பிடிப்புகள் எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும், மீதமுள்ளவை ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில்   படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. 

 

தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை. நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடி படம் செய்யும் இயக்குநராக்கி விட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது. 

 

 


இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே  பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை ஹிந்தி ரசிகர்களும், தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு  வைத்துள்ளோம். இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம். இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது'' என்றார்.

 

Next Story

ஷூட்டிங் ஸ்பாட்டில் படுகாயம் அடைந்த விஷால்...!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

'அயோக்யா' படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில் விஷால் அடுத்ததாக டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவிந்திரன் தயாரித்து, சுந்தர்.சி இயக்கி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக வி‌ஷால், நாயகியாக நடிக்கும் தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர்.

 

vishal

 

அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அதில் காரில் செல்லும் வில்லன்களை நான்கு சக்கரம் உள்ள வெளிநாட்டு பைக்கில் வி‌ஷால் துரத்தி செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த வி‌ஷால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர். விஷாலுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.