ஹாட்ரிக் - பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷால்

vishal new movie with hari

விஷால், தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த போது சமீபத்தில் லாரி மோதி விபத்து நடந்தது. பின்பு லைட் கம்பம் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை விபத்துகள்நடந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படம் பான் இந்தியா படமாக வழியாகும் என அறிவித்த படக்குழு விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு 'அடங்க மறு' பட இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் விஷால் ஒரு படம் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் செப்டம்பரில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ‘தாமிரபரணி’, ‘பூஜை’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத்தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி இணையவுள்ளதாக சொல்லப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் ஹரி, கடைசியாக அருண் விஜய்யை வைத்து 'யானை' படத்தை எடுத்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. பின்பு சூர்யாவுடன் மீண்டும் இணைந்து 'சிங்கம் 4' படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது விஷாலுடன் இணையவுள்ளதாக சொல்லப்படுவதுரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த குழப்பம் தீர்க்க விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹரி வெளியிடுவார் என பரவலாக பேசப்படுகிறது.

actor vishal director hari
இதையும் படியுங்கள்
Subscribe