vishal condolence message to vijayakumar ips

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

டி.ஐ.ஜி.யின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் விஜயகுமார் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விஜயகுமார் ஐ.பி.எஸ் (கோயம்புத்தூர் டி.ஐ.ஜி.) தற்கொலை செய்து கொண்டார் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரைப் பலமுறை சந்தித்துள்ளேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரது இறுதி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.