Skip to main content

"அனுஷ்கா சர்மாவை கோலி விவாகரத்து செய்ய வேண்டும்"- பா.ஜ.க. எம்.எல்.ஏ!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

paatal lok


இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வெப் தொடர் பாதாள் லோக். இந்த வெப் தொடரை பிரபல நடிகையும், விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தயாரித்துள்ளார்.
 


வட இந்தியாவில் நடைபெறும் பல நிழல் உலக அரசியல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரானது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

அதேபோல பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்தத் தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர். 

இதற்கிடையே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ நந்தகிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி வெப் தொடரில் பயன்படுத்தி உள்ளதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
 

 


இதனையடுத்து எம்.எல்.ஏ. குர்ஜார் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும். விராட் கோலி  தேசபக்தர். அவர் இந்தியாவின் பிரதிநிதி" என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே காரணத்திற்காக அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா மீது போலீஸ் நடவடிக்கை

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Amitabh Bachchan and Anushka Sharma in trouble for not wearing helmet while bike riding

 

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க பைக் ஓட்டி வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அந்த நபருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கையில் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இதனை சமூக வலைத்தளத்தில் மும்பை போலீஸ் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். 

 

இதேபோன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒருவருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது அதற்கு மும்பை போலீஸார் பதிலளித்துள்ளனர். இருவரும் ஹெல்மெட் போடாதது தொடர்பாக  டிராபிக் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.  

 

மும்பை போலீசின் இந்த பதிவிற்கு மன்னிப்பு கேட்டு அவரது வலைப் பதிவில் பதிவிட்டுள்ளார் அமிதாப் பச்சன். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே', 'செக்‌ஷன் 84' படத்தில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். அனுஷ்கா சர்மா 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வருகிறார். 


 

Next Story

“அனுஷ்காவிடம் பேசும்போது அழுதேன்” - மனம் திறந்த விராட்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

"I cried while talking to Anushka," Virat said

 

விராட் கோலி தனது 71 ஆவது சதத்தை 70 ஆவது சதம் அடித்து கிட்டத்தட்ட 1021 தினங்கள் கடந்த பின்பே அடித்தார். ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் இச்சாதனையை செய்தார்.

 

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய let there be Sport எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விராட் தனது 71 ஆவது சதம் குறித்து மனம் திறந்தார். அப்போது பேசிய அவர், “நான் சதத்தினை எட்டுவதற்கு முந்தைய பந்து, ‘நான் இப்போது 94 ரன்னில் இருக்கிறேன். ஒரு வேளை சதமடிக்கலாம்’ என நினைத்தேன். அடுத்த பந்தே சிக்ஸருக்கு சென்றது. ஆனால் 100 ரன்களை அடித்ததும் நான் அதிகமாக சிரித்தேன். ‘இதைத் தானா 2 வருடங்களாக தேடிக் கொண்டிருந்தேன்’ என்பன போன்ற மனநிலையில் இருந்தேன்.

 

சதமடித்த கணம் நிகழ்ந்ததும் வேகமாக கடந்து சென்றது. மறுநாள் மீண்டும் உதயமானது. அந்த கணம் என்றென்றும் இருக்கப் போவதில்லை” என்றார். தொடர்ந்து தொகுப்பாளர், சதமடித்த பின் அழுதீர்களா எனக் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, “சதமடித்த நேரத்தில் அழவில்லை. அனுஷ்கா சர்மாவுடன் பேசும்போது அழுததாக தெரிவித்தார்.