Skip to main content

சிம்பு நடிப்பில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' எப்போது..?

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

sdg

 

சிம்பு - கெளதம் மேனன் - த்ரிஷா கூட்டணியில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.
 


மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே இப்படத்தின் தொடர்ச்சியாக 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் நேற்று முன்தினம் வெளியாகி வைரலானது. ஒன்றாக எண்டர்டையின்மெண்ட் சார்பாக கெளதம் மேனன் இயக்கிய இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படம் உருவாகவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. சிம்பு தற்போது நடித்து வரும் 'மாநாடு' படத்தை முடித்த கையோடு 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்துக்குத்தான் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீஸ்ட்- கே.ஜி.எஃப் 2 போட்டிக்கு இடையே சிம்பு படம் செய்த மேஜிக்!

Published on 16/04/2022 | Edited on 17/04/2022

 

SDR at PVR Theater between Beast-KGF2. Picture!

 

சென்னையில் உள்ள பிரபல மால்களில் ஒன்று சென்னை விஆர் மால். இந்த மாலில் அமைந்துள்ளது பிவிஆர். திரையரங்குகள். புதிதாக வெளியாகும் அனைத்து படங்களும் இந்த திரையரங்குகளில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர்- 2 படம், ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் ஒளிபரப்பியது பிவிஆர் திரையரங்குகளின் நிர்வாகம். 

 

அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி, நடிகர் சிம்பு நடிப்பில், கடந்த 2010- ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தனது திரையரங்குகளில் உள்ள ஒரு திரையில் ஒளிபரப்ப தொடங்கியது பிவிஆர் நிர்வாகம். இப்படத்தை காண நாள்தோறும் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

இப்படத்திற்கான டிக்கெட் பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேல் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தை பிவிஆர் நிர்வாகம் ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், பீஸ்ட், கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு மத்தியிலும் 'விண்ணை தாண்டி வருவாயா' படம் இரண்டு மாதங்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

 

Next Story

"நன்றியுணர்வு நிறைந்து நிற்கிறேன்" - சமந்தா நெகிழ்ச்சி

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

samantha talk about 12 years cinema experience

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் ஒரு சிறிய கட்சியில் நடித்திருந்தார். ஆனால் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாயா சேசாவா' படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் சமந்தா முதன் முதலாக திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.

 

இத்திரைப்படம் தன்னை விட மூத்த வயது பெண்ணை காதலிக்கும் ஒரு ஆணின் காதலை சித்தரிக்கும் வகையில் வெளியான இப்படம் இரு மொழிகளிலுமே பெரும் வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அத்துடன் நடிகை சமந்தாவும் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.  

 

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, "நான் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 12 வருடங்கள் நிறைவடைகிறது. 'லைட்ஸ் கேமரா ஆக்‌ஷன்' என்ற வார்த்தைகளைச் சுற்றியும், ஒப்பற்ற தருணங்களைச் சுற்றியுமே இந்த 12 ஆண்டுகால நினைவுகள் அமைந்துள்ளன. ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பயணத்தில் இருப்பதிலும், உலகில் மிகச் சிறந்த விஸ்வாசமான ரசிகர்களைப் பெற்றதாலும் நன்றியுணர்வு நிறைந்து நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.