Skip to main content

தடையை உடைத்து ரிலீஸாக உள்ள விமல் படம்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

vimal

 

விமல் - வரலட்சுமி நடித்து, இன்று வெளியாகவிருந்த படம் 'கன்னிராசி'. இப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவிற்கான விநியோகஸ்த உரிமையை, மீடியா டைம்ஸ் என்ற நிறுவனம் 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 

 

இந்தநிலையில், மீடியா டைம்ஸ் நிறுவனம், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், கன்னிராசி படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் விநியோக உரிமையை, தாங்கள் 17 லட்ச ரூபாய்க்கு வங்கியுள்ளதாகவும், விநியோக உரிமையை வாங்கும்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2018 -ஆம் ஆண்டுக்குள் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவில்லை எனவும் கூறியுள்ள அந்த நிறுவனம், தற்போது கன்னிராசி படத்தின் விநியோக உரிமையை, தயாரிப்பாளர் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும், எனவே தங்களிடம் பெறப்பட்ட 17 லட்ச ரூபாயை வட்டியோடு சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரமாக வழங்கவேண்டும், அதுவரை படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரியிருந்தது.

 

அண்மையில் இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், கன்னிராசி படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக பதிலளிக்க, கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஷாமின் இப்ராஹிம், வரும் டிசம்பர் 7 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

 

தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படத்தை டிசம்பர் 4 -ஆம் தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாகத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"கடைசி விவசாயி போல் இப்படம் இருக்கும்" - பேரரசு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

perarasu speech in Badava Audio Launch

 

நடிகர்கள் விமல் மற்றும் சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்துள்ள படம் 'படவா'. இசையமைப்பாளர் ஜான் பீட்டர் ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் என்ற பேனரில் இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். கே.வி. நந்தா இயக்கும் இப்படத்தில், ஸ்ரீதா கதாநாயகியாகவும், 'கேஜிஎஃப்' புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

 

இயக்குந‌ர் பேரரசு பேசியதாவது, "நடிகர் விமல் வெற்றி அடைந்துகொண்டே இருக்க வேண்டும். 'படவா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. 'கடைசி விவசாயி' தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அதுபோன்ற திரைப்படமாகத் தான் 'படவா' இருக்கும் என்று தோன்றுகிறது" என்றார். 

 

விஜய் ஆண்டனி பேசியதாவது, "ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமலுக்கும் வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்." என்றார். 

 


 

Next Story

"45 நாள் ஆச்சு; உண்மையிலேயே நானும் மாறிவிட்டேன்" - விமல்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

vimal speech at Thudikkum Karankal Audio Launch

 

வேலு தாஸ் இயக்கத்தில் அண்ணாதுரை தயாரிப்பில் விமல், மிஷா நரங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.  

 

அப்போது விமல் பேசுகையில், "நிறைய பேரு படமே வரமாட்டேங்குதுனு சொல்றாங்க. ஆண்டவன் புண்ணியத்தில் இப்போது நிறைய படம் நடிச்சிகிட்டு வரேன். கையெழுத்து போடுறதில்லை. அதனால் இனிமேல் நிறைய படங்கள் வரும். சினிமாவுக்கு வந்த புதுசில் நீட்டின இடத்தில எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டேன். அதை முடிக்க 6 வருஷம் ஆச்சு. லாக்டவுன் சமயத்தில் இப்படம் தான் எனக்கு கைகுடுத்துச்சு. அதனால் இப்படம் எனக்கு ஒரு ஸ்பெஷல். 

 

ரோபோ ஷங்கர் 6 மாசமா உடல் நிலை சரியில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார். அந்த நேரத்தில் எனக்கே சங்கடமாக இருக்கும். அவரோடு ஃபோன் கூட பேசமாட்டேன். ஆனால் அவரை பற்றி அவரது வீட்டில் விசாரிப்பேன்" என்றார். உடனே மேடையில் இருந்த ரோபோ ஷங்கரை பார்த்து, "மாமா...நீங்க கவலைபடாதீங்க. நீங்க ஒரு பல்கலைக்கழகம். உங்களை பார்த்து பல பேர் திருந்திருக்காங்க. உடலை கட்டுப்பாடுடன் வைத்து கொள்வதில் ஆர்வமாக இருக்காங்க" என்றார். 

 

பேசி முடித்துவிட்டு மேடை இருக்கையில் அமர்ந்த விமலிடம், பல பேர் மாறிவிட்டார்கள் என சொல்றாங்க, ஆனால் உங்களை பற்றி சொல்லவில்லையே.. என கேட்க, திருப்பியும் மைக் அருகில் வந்த விமல், "45 நாள் ஆச்சு. உண்மையை தான் சொல்கிறேன். நானும் மாறிவிட்டேன்" என்றார்.