ADVERTISEMENT

"தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி..." - ஆதித்ய கரிகாலன் ட்வீட்

05:14 PM Sep 13, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே இப்படத்தில் நடித்த நடிகர்கள் கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் படத்தின் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு கலாய்த்து ஜாலியாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT