Skip to main content

"என்னென்னமோ பாத்துட்டோம், இதெல்லாம் ஒண்ணுமே இல்லை" - விக்ரம் பேச்சு

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

vikram speech at 'cobra' movie audio launch

 

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம்  வருகிற ஆகஸ்ட் 11-ஆம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (11.07.2022) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், ஏ.ஆர் ரகுமான், உதயநிதி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசுகையில், " விக்ரம் மாரடைப்பால் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற பல செய்தியை பார்த்தேன் நல்லாயிருந்தது. இன்னும் சில பேர் க்ரியேட்டிவாக எடிட் செய்திருந்தனர். அதுவும் நல்லாயிருந்தது. இதெல்லாம் பார்க்கும் போது நாம என்னென்னமோ பாத்துட்டோம், ஒண்ணுமே இல்லை என்று தான் தோன்றியது. அதனால் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. என் குடும்பம், ரசிகர்கள், நண்பர்கள் எல்லாம் எனக்கு பலமாக இருக்கும்போது எனக்கு ஒண்ணுமே ஆகாது. எனக்கு 20-வயது இருக்கும் அப்போது ஒரு விபத்து நடந்தது, எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த சூழலில் கால் எடுக்க வேண்டி இருந்தது, அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். அதன் பிறகு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. 

 

சில தினங்களுக்கு முன்பு மார்பில் லேசான அசௌகரியம் இருந்தது. அதன் காரணமாகத்தான் மருத்துவமனை சென்றோம். எனக்கு விருப்பப்பட்டவர்கள், நெருங்கியவர்கள் அனைவரும் வேதனை அடைந்தார்கள். குறிப்பாக ரசிகர்கள் என்னோடு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாமல் ரொம்ப வருத்தப்பட்டனர். அவர்கள் உள்பட எல்லாருக்கும் நான் இந்த மேடையில் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்வது என் கடமை. அனைவருக்கும் நன்றி. நான் எப்போதுமே சினிமாவிற்காக மட்டும் தான் வாழ்ந்தேன், சினிமா மட்டும் தான் எனக்கு உயிர், வேற எதுவுமே கிடையாது. நமக்குன்னு ஒரு கனவு இருந்தா...ஒரு லட்சியம் இருந்தா... அதற்காக உழைச்சோம்னா யாராக இருந்தாலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர முடியும் " என குறிப்பிட்டு படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் விக்ரம் பேசியுள்ளார்.                

 

இதனிடையே விக்ரம் சில தினங்களுக்கு முன்பு மார்பில் லேசான அசௌகரியம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.