மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘கர்ணன்’ திரைப்படத்தினைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த நடிகர் விக்ரம், மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்தியுள்ளார். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் நடிக்கும் அடுத்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.