''அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன்'' - விக்ரம்  

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யவர்மா படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விக்ரம் துருவ் விக்ரம் குறித்து பேசும்போது....

vikRAM

"இது அருமையான தருணம். ஒரு இதழில் விமர்சனம் எழுதி இருந்தார்கள். "துருவ் சியான் விக்ரமின் மகன் நேற்று. துருவின் அப்பா சியான் விக்ரம் இன்று சபாஷ்" என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது. ஊடகங்கள் மொத்தமும் துருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. நான் பேச வேண்டியதை எல்லாம் துருவ் பேசிவிட்டார். இந்தப்படத்தில் ஐந்து முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்தீப்பிற்கு முதல் நன்றி. துருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை துருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. ரவி.கே சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்கு பெரியபலம் கிடைத்தது. அன்புதாசன் இந்தப்படத்தோட இன்னொரு பலம். அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன். அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான்.

துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத்மாரி எழுதியது. அவருக்கும் நன்றி. ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். நான் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன். மேலும் என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விஷயம். இந்தப்படம் கிரிசாயா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார். இசையமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசையமைப்பாளராக வருவாய் என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப்படத்தோட எல்லா உதவி இயக்குநர்களும், ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

actor vikram dhruv vikram Adithya Varma
இதையும் படியுங்கள்
Subscribe