YuthaSatham

நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் எழில், முதன்முறையாக தன்னுடைய பாணியிலிருந்து விலகி முழுக்க முழுக்க மர்மம் நிறைந்ததிரில்லர்படம் ஒன்றை இயக்கியுள்ளார். 'யுத்த சத்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர்ராஜேஷ்குமார்எழுதிய யுத்த சத்தம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில்ரோபோசங்கர், காமராஜ், மது ஸ்ரீ,மனோபாலா, வையாபுரி, கும்கி அஷ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைநடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

Advertisment

'யுத்த சத்தம்' படம் குறித்து இயக்குநர் எழில் கூறுகையில், "'யுத்த சத்தம்' என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாகும். முதல் காரணம் இது என் வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, மிகவும்நேர்த்திகரமாகஉருவாகும் படைப்பு. நான் இதுவரையிலும்மென்உணர்வுகளைக்கூறும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களையே எடுத்துள்ளேன். ஆனால் இப்படம் மர்மம் நிறைந்த, பரபரப்பானதிரில்லர்திரைப்படம் ஆகும். இதுதிரில்லர்வகையில் மட்டும், என் படங்களிலிருந்து மாறுபட்டதல்ல, படத்தின் உருவாக்கத்திலேயே என் படங்களிலிருந்து முற்றிலும் புதிதானதாக இருக்கும். யுத்த சத்தம் தலைப்பானது படத்தின் கதை உருவானராஜேஷ்குமார்அவர்களின் நாவலின் அதே தலைப்பாகும். படம் அவரது கதையிலிருந்து வேறுபடாமல் சிறப்பாக வந்திருப்பதாகஎன்னைப்பாராட்டவும் செய்தார்.

Advertisment

நடிகர் பார்த்திபன் அவர்களிடம்நான் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளேன் இப்போதும் அவர் திரைக்கதையில் மாயாஜாலம் புரிந்து, இயக்குநராக அசத்தி வருகிறார். அவரை திரையில் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் கௌதம் கார்த்திக் மிகத்திறமை வாய்ந்த இளம் நடிகர், இப்படத்தில் மிக அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களைஆச்சரியப்படுத்திஅசத்தும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றார்.