Skip to main content

கௌதம் கார்த்திக் பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

YuthaSatham

 

நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் எழில், முதன்முறையாக தன்னுடைய பாணியிலிருந்து விலகி முழுக்க முழுக்க மர்மம் நிறைந்த திரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். 'யுத்த சத்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய யுத்த சத்தம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, வையாபுரி, கும்கி அஷ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

 

'யுத்த சத்தம்' படம் குறித்து இயக்குநர் எழில் கூறுகையில், "'யுத்த சத்தம்' என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாகும். முதல் காரணம் இது என் வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, மிகவும் நேர்த்திகரமாக உருவாகும் படைப்பு. நான் இதுவரையிலும் மென் உணர்வுகளைக் கூறும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களையே எடுத்துள்ளேன். ஆனால் இப்படம் மர்மம் நிறைந்த, பரபரப்பான திரில்லர் திரைப்படம் ஆகும். இது திரில்லர் வகையில் மட்டும், என் படங்களிலிருந்து மாறுபட்டதல்ல, படத்தின் உருவாக்கத்திலேயே என் படங்களிலிருந்து முற்றிலும் புதிதானதாக இருக்கும். யுத்த சத்தம் தலைப்பானது படத்தின் கதை உருவான ராஜேஷ்குமார் அவர்களின் நாவலின் அதே தலைப்பாகும். படம் அவரது கதையிலிருந்து வேறுபடாமல்  சிறப்பாக வந்திருப்பதாக என்னைப் பாராட்டவும் செய்தார்.

 

நடிகர் பார்த்திபன் அவர்களிடம் நான் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளேன் இப்போதும் அவர் திரைக்கதையில் மாயாஜாலம் புரிந்து, இயக்குநராக அசத்தி வருகிறார். அவரை திரையில் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் கௌதம் கார்த்திக் மிகத்திறமை வாய்ந்த இளம் நடிகர், இப்படத்தில் மிக அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி அசத்தும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

மீண்டும் முன்னணி நடிகர் படத்தில் மஞ்சு வாரியர்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

manju warrier joins arya mr x movie

 

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் எக்ஸ் (Mr.X). இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். திபு நிபுணன் தாமஸ் என்பவர் இசையமைக்கிறார். 

 

இந்நிலையில் இப்படத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் அசுரன் படத்தில் அறிமுகமான மஞ்சு வாரியர் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களை அடுத்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகும் நிலையில் இன்று பூஜை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தமிழ், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

கௌதம் கார்த்திக் கடைசியாக 'ஆகஸ்ட் 16 1947' படத்தில் நடித்திருந்தார். ஆர்யா 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன.